Thursday, November 24

பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி இந்தியா


பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8, 2016 நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் வங்கியில் பணம் எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்டசில்லரை தட்டுப்பாட்டினால் சிறு, குறு வணிகர்கள், வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், Paytm மொபைல் வாலட் நிறுவனம் தனது மொபைல் செயலியில் (App) கடை உரிமையாளர்கள் பணத்தை வாடிக்கையாளர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பெற்றுக்கொள்வதற்கான புதிய வசதியை அறிமுகப்படுதியுள்ளது.


இந்த புதிய வசதியினால் இனி Swipe மெஷின்கள் தேவையில்லை. தற்போது 7 லட்சம் வர்த்தகர்கள், 14.8 லட்சம் Point Of Sale மெஷின்கள், 74 கோடி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பணத்தை செலுத்த வாடிக்கையாளர் Paytm கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
விற்பனையாளர் செலுத்த வேண்டிய தொகையை உள்ளீடு செய்த பின்பு வாடிக்கையாளர் தனது கார்டு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஓ.டி.பி எனப்படும் One Time Password அவரது மொபைல் எண்ணிற்கு வரும். (வழக்கமான ஆன்லைன் பரிவர்த்தனைகளை போல).

வாடிக்கையாளர் பரிவர்த்தனையின் பாதுகாப்பை உறுதி செய்ய, வாடிக்கையாளர் பதிவு செய்த கார்டு விவரங்கள் Paytm செயலியில் இருக்காது மாறாக வங்கியின் வலைத்தளத்தில் இருக்கும் என Paytm தெரிவித்துள்ளது.  

Augustin

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.